என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கும் முகாம்
Byமாலை மலர்31 July 2020 1:24 PM GMT (Updated: 31 July 2020 1:24 PM GMT)
நாமக்கல் மலர் ஓமியோபதி மருத்துவமனையில் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கும் முகாம் நடைபெற்றது.
நாமக்கல்:
சேந்தமங்கலம் நகர அரிமா சங்கம், மக்கள் சக்தி தொண்டு அறக்கட்டளை, ஆரிய வைசிய அறக்கட்டளை, கலைமலையான் அறக்கட்டளை ஆகியவை இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையுடன் இணைந்து நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கும் முகாமை சேந்தமங்கலத்தில் நடத்தின.
இதில் மலர் ஓமியோபதி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எழில்செல்வன் கலந்து கொண்டு சுமார் 5 ஆயிரம் பேருக்கு ஓமியோபதி மாத்திரைகளை வழங்கினார். இதேபோல் நாமக்கல்-சேலம் சாலை தாலுகா லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகம் அருகே உள்ள மலர் ஓமியோபதி மருத்துவமனை, நாமக்கல் ஜேசீஸ் சங்கத்துடன் இணைந்து மருத்துவமனை வளாகத்தில் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கும் முகாமை நடத்தின. இதில் நகராட்சி தூய்மை பணியாளர்கள், பொதுமக்களுக்கு ஆர்சனிக் ஆல்பம் என்ற நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரை வழங்கப்பட்டது. இதில் நாமக்கல் ஜேசீஸ் சங்க தலைவர் சிங்காரவேல், கவிஞர் சிந்தனை பேரவை தலைவர் மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X