என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொதுமுடக்கம் நீட்டிப்பு - அரசாணை வெளியீடு
Byமாலை மலர்31 July 2020 7:48 AM GMT (Updated: 31 July 2020 7:48 AM GMT)
தமிழகத்தில் பொதுமுடக்கம் ஆக.31 வரை நீட்டிக்கப்பட்டது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் ஊரடங்கு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இதற்கு முன் கடைசியாக நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு இன்றுடன் (வெள்ளிக்கிழமை) முடிவடைவதாக இருந்தது.
கொரோனா பாதிப்பு குறையாததால் ஊரடங்கை வருகிற ஆகஸ்டு 31-ந் தேதி வரை மேலும் ஒரு மாதம் நீட்டித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் பொதுமுடக்கம் ஆக.31 வரை நீட்டிக்கப்பட்டது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஆக.31 இரவு 12 மணி வரை பொதுமுடக்கம் அமலில் இருக்கும் இன்று அரசு தெரிவித்துள்ளது.
* திருமண நிகழ்வுகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும்.
* இறப்பு, இறுதிச் சடங்குகளில் 20 பேருக்கு மிகாமல் பங்கேற்கலாம்.
* பொது இடங்கள், பணியிடங்களில், பயணத்தின்போது முகக்கவசம் அணிவது கட்டாயம்
* பொது இடங்களில் எச்சில் துப்பினால் அபராதம்; பொது இடங்களில் மது அருந்த, குட்கா பயன்படுத்த தடை
என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X