என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் ஸ்ரீநகரில் வாலிபர்களை கட்டையால் தாக்கிய 2 பேர் கைது
Byமாலை மலர்30 July 2020 9:09 AM GMT (Updated: 30 July 2020 9:09 AM GMT)
திருப்பூர் ஸ்ரீநகரில் வாலிபர்களை கட்டையால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் பிச்சம்பாளையத்தை அடுத்த ஸ்ரீநகர் 5-வது வீதியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் அரவிந்த் (வயது 19). சம்பவத்தன்று அரவிந்த் மற்றும் அவருடைய நண்பர்களான சந்தோஷ்(20), ஜெயக்குமார், கிருஷ்ணா ஆகியோர் அந்த பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில் முன்பு உட்கார்ந்து செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கிரி என்கிற சபரிநாதன் (20), விஷ்வா (20), சுந்தர், ஜீவா, சுஜித், கருப்பையா ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். மேலும் அதிக சத்தம் போட்டதாக தெரிகிறது.
இதை கண்ட அரவிந்த் மற்றும் சந்தோஷ் அவர்களை பார்த்து ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 6 பேரும் சேர்ந்து அரவிந்த், சந்தோஷை கட்டையால் கடுமையாக தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அரவிந்த் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கிரி என்கிற சபரிநாதன், விஷ்வா ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுந்தர், ஜீவா, சுஜித், கருப்பையா உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர். திருப்பூரில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர்களை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூர் பிச்சம்பாளையத்தை அடுத்த ஸ்ரீநகர் 5-வது வீதியை சேர்ந்த உதயகுமார் என்பவரின் மகன் அரவிந்த் (வயது 19). சம்பவத்தன்று அரவிந்த் மற்றும் அவருடைய நண்பர்களான சந்தோஷ்(20), ஜெயக்குமார், கிருஷ்ணா ஆகியோர் அந்த பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோவில் முன்பு உட்கார்ந்து செல்போனில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த கிரி என்கிற சபரிநாதன் (20), விஷ்வா (20), சுந்தர், ஜீவா, சுஜித், கருப்பையா ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். மேலும் அதிக சத்தம் போட்டதாக தெரிகிறது.
இதை கண்ட அரவிந்த் மற்றும் சந்தோஷ் அவர்களை பார்த்து ஏன் இப்படி சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 6 பேரும் சேர்ந்து அரவிந்த், சந்தோஷை கட்டையால் கடுமையாக தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து அரவிந்த் கொடுத்த புகாரின் பேரில் அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கிரி என்கிற சபரிநாதன், விஷ்வா ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சுந்தர், ஜீவா, சுஜித், கருப்பையா உள்ளிட்ட 4 பேரை தேடி வருகின்றனர். திருப்பூரில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர்களை தாக்கி, கொலைமிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X