என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 382 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்30 July 2020 9:05 AM GMT (Updated: 30 July 2020 9:05 AM GMT)
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 382 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 16 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை 13 ஆயிரத்து 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8,872 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4,086 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானதையடுத்து, இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 226 ஆனது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட நாராயணபுரம் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண், குளக்கரை பகுதியில் வசிக்கும் 9 வயது, 11 வயது சிறுமிகள், 8 வயது சிறுவன், கோவிந்தராஜபுரம் 5-வது தெருவை சேர்ந்த 27 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
வண்டலூர் மூகாம்பிகை கோவில் தெருவை சேர்ந்த 30 வயது ஆண் உள்பட 36 பேரும், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ரெயில் நகர் பகுதியில் வசிக்கும் 3 வாலிபர்கள், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த 30 வயது வாலிபர், 65 வயது மூதாட்டி, 62 வயது முதியவர் 29 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 5 பேர் ஆகியோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 540 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 841 ஆனது. இவர்களில் 9,900 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 242 ஆக உயர்ந்தது. 3,699 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி மற்றும் மணிமங்கலம் பகுதியை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 8,422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5,120 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
3,196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 6 பேர் பலியானதால் சாவு எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 7 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 16 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 382 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்டம் முழுவதும் இதுவரை 13 ஆயிரத்து 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 8,872 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4,086 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 4 பேர் பலியானதையடுத்து, இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 226 ஆனது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட நாராயணபுரம் பகுதியை சேர்ந்த 35 வயது ஆண், குளக்கரை பகுதியில் வசிக்கும் 9 வயது, 11 வயது சிறுமிகள், 8 வயது சிறுவன், கோவிந்தராஜபுரம் 5-வது தெருவை சேர்ந்த 27 வயது வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
வண்டலூர் மூகாம்பிகை கோவில் தெருவை சேர்ந்த 30 வயது ஆண் உள்பட 36 பேரும், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ரெயில் நகர் பகுதியில் வசிக்கும் 3 வாலிபர்கள், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த 30 வயது வாலிபர், 65 வயது மூதாட்டி, 62 வயது முதியவர் 29 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 5 பேர் ஆகியோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சமாக நேற்று ஒரே நாளில் 540 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13 ஆயிரத்து 841 ஆனது. இவர்களில் 9,900 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 242 ஆக உயர்ந்தது. 3,699 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி மற்றும் மணிமங்கலம் பகுதியை சேர்ந்த 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 373 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை 8,422 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5,120 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
3,196 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 6 பேர் பலியானதால் சாவு எண்ணிக்கை 106 ஆக உயர்ந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X