search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கலெக்டர் மலர்விழி
    X
    கலெக்டர் மலர்விழி

    கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் மலர்விழி தகவல்

    தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கல்பனா சாவ்லா விருதுபெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் மலர்விழி தெரிவித்துள்ளார்.
    தர்மபுரி:

    கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2020-ம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது சுதந்திர தினத்தன்று தமிழக முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது. இந்த விருதை 

    பெற தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக 

    கொண்டவர்களாகவும், 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும்.

    சமூக நலனை சார்ந்து செயல்படுபவர்கள், துணிச்சல் மற்றும் தைரியத்தோடு நிறுவனங்களை சிறப்பாக நடத்துபவர்கள், துணிச்சலாக 

    மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் தொடர்ந்து பணியாற்றுபவர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.

    மேற்கண்ட தகுதியுடைய தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் இன்று (வியாழக்கிழமை)க்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

    விண்ணப்பங்களை தர்மபுரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்படும் தர்மபுரி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் 

    சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இதுதொடர்பாக மேலும் விவரங்கள் அறிய மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். 04342 - 233088 என்ற 

    தொலைபேசி எண்ணிலும் தொடர்புகொண்டு தேவையான விவரங்களை அறிந்துகொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×