என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சுழி அருகே மருத்துவ முகாம்
Byமாலை மலர்29 July 2020 1:54 PM GMT (Updated: 29 July 2020 1:54 PM GMT)
திருச்சுழி அருகே உள்ள பனையூர் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருச்சுழி:
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் திருச்சுழி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நரிக்குடி, வீரசோழன், கல்லூரணி, ரெட்டியாபட்டி ஆகிய பகுதிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகத்தின் அறிவுரையின் பேரில் சுகாதாரத்துறையினர் மருத்துவ முகாமினை நடத்தி வருகின்றனர். அதன்படி திருச்சுழி அருகே உள்ள பனையூர் பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பனையூர், பிள்ளையார் நத்தம் மற்றும் அதனைச்சுற்றி உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டனர். பரிசோதனை செய்தவர்கள் முடிவு வரும் வரை தனிமைப்படுத்திக் கொள்ளவும், முறையாக சமூக இடைவெளியை பின்பற்றவும், முககவசம் அணியவும் பொதுமக்களுக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அறிவுரை வழங்கினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X