search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுக்கடையில் வங்கி மேலாளருக்கு கொரோனா

    புதுக்கடையில் வங்கி மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
    புதுக்கடை:

    புதுக்கடை மெயின் ரோட்டில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் மேலாளராக உள்ளவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அவருக்கு பரிசோதனை செய்தபோது, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 55 வயதான அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    உடனே சுகாதாரத்துறையினர் வங்கிக்கு சென்று அங்கு பணி புரிந்த 7 ஊழியர்களுக்கும் பரிசோதனை செய்தனர். மேலும் வங்கிக்கு வந்து சென்றவர்கள் விவரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து வங்கி நேற்று மதியம் மூடப்பட்டது. அதன்பிறகு வங்கியை சுற்றி கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, பிளீச்சிங் பவுடர் தூவப்பட்டது.
    Next Story
    ×