search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் போராட்டம்
    X
    டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் போராட்டம்

    டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்

    திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    திருவண்ணாமலை:

    டாஸ்மாக் பணியாளர்களின் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கொரோனா தொற்றால் உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு பணி வழங்க வேண்டும். பணியாளர்களின் குடும்பத்தின் மருத்துவ செலவை அரசு முழுமையாக ஏற்க வேண்டும். நோய் தொற்று பரிசோதனை அனைத்து பணியாளர்களுக்கும் செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தினர்.

    அதைத் தொடர்ந்து கோரிக்கை அட்டை அணிந்து பணியாளர்கள் பணியில் ஈடுபட்டனர்.
    Next Story
    ×