search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொள்ளை
    X
    கொள்ளை

    மளிகை கடைக்காரர் வீட்டில் நகை திருட்டு

    சிவகாசி அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டி வ.உ.சி. நகரை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 55). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். பாண்டியனும், அவரது மனைவி சுப்புலட்சுமியும் வீட்டை பூட்டி விட்டு சாவியை கதவின் மேல் வைத்துவிட்டு மளிகை கடையை திறக்க வந்து விட்டனர். பின்னர் வீட்டிற்கு சென்றபோது அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த 5 பவுன் தங்க செயினை காணவில்லை. 

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாண்டியன் மற்றும் அவரது குடும்பத்தினர் நகை திருட்டு போனது குறித்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் விசாரித்தனர். இதையடுத்து எம்.புதுப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×