என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்றில் மூழ்கி டாக்டர் மகன், மாணவி பலி
Byமாலை மலர்29 July 2020 9:37 AM GMT (Updated: 29 July 2020 9:37 AM GMT)
கச்சிராயப்பாளையம் அருகே ஆற்றில் மூழ்கி டாக்டர் மகன், மாணவி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கச்சிராயப்பாளையம்:
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கச்சிராயப்பாளையத்தை சேர்ந்தவர் சசிகுமார். இவர் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் பத்மசரண்(வயது 12). கச்சிராயப்பாளையத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் சசிகுமார் அவரது மகனை பொட்டியம் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டில் தங்க வைத்தார். அங்கு பத்மசரண், தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் அதே பகுதியை சேர்ந்த தனது உறவினர் பெண் காயத்ரி(14) என்பவருடன் துணி துவைப்பதற்காக பொட்டியம் ஆற்றுக்கு சென்றான். அங்கு காயத்ரி துணி துவைத்துக்கொண்டிருந்தார்.
அப்போது குளிப்பதற்காக ஆற்றில் இறங்கிய பத்மசரண் ஆழமான பகுதிக்கு சென்றதால் நீச்சல் தெரியாமல் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக்கொண்டிருந்தான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த காயத்ரி அவனை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்தபோது அவரும் தண்ணீரில் மூழ்கினார். உடனே அருகில் நின்றவர்கள் ஓடி வந்து தண்ணீரில் மூழ்கிய இருரையும் மீட்டு சிகிச்சைக்காக கச்சிராயப்பாளையம் ஆரம்பசுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பத்மசரணும், காயத்ரியும் பரிதாபமாக இறந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X