என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் மாவட்டத்தில் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்த டாஸ்மாக் ஊழியர்கள்
Byமாலை மலர்29 July 2020 8:46 AM GMT (Updated: 29 July 2020 8:46 AM GMT)
விழுப்புரம் மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர்.
விழுப்புரம்:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணி செய்து வரும் ஊழியர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதையடுத்து பணி பாதுகாப்பு, கொரோனா தொற்றால் உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, வாரிசுகளுக்கு அரசு பணி, கூடுதலாக ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்துக்கு கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்ய டாஸ்மாக் ஊழியர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முதல் விழுப்புரம் மாவட்டத்தில் 226 கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 850 பேர் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர். ஒருவாரத்திற்கு பிறகும் அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை என்றால் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் பணி செய்து வரும் ஊழியர்கள் கொரோனா தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதையடுத்து பணி பாதுகாப்பு, கொரோனா தொற்றால் உயிரிந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, வாரிசுகளுக்கு அரசு பணி, கூடுதலாக ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு வாரத்துக்கு கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்ய டாஸ்மாக் ஊழியர்கள் முடிவு செய்தனர்.
அதன்படி நேற்று முதல் விழுப்புரம் மாவட்டத்தில் 226 கடைகளில் பணியாற்றும் விற்பனையாளர்கள், மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 850 பேர் கோரிக்கை அட்டை அணிந்து பணி செய்தனர். ஒருவாரத்திற்கு பிறகும் அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை என்றால் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X