என் மலர்
செய்திகள்

தமிழக அரசு
வருங்கால வைப்பு நிதிக்கு 7.1 சதவீத வட்டி- அரசாணை வெளியீடு
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வருங்கால வைப்பு நிதிக்கு ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நிதியாண்டின் 2-வது காலாண்டில் வட்டி வீதத்தின் அளவு 7.1 சதவீதத்திலேயே தொடரும் என்று அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை:
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம் ஒவ்வொரு காலாண்டிலும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நிதியாண்டின் முதல் காலாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம் 7.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நிதியாண்டின் 2-வது காலாண்டில் வட்டி வீதத்தின் அளவு அதே அளவான 7.1 சதவீதத்திலேயே தொடரும் என்று அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான அரசாணையை நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம் ஒவ்வொரு காலாண்டிலும் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.
கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான நிதியாண்டின் முதல் காலாண்டில் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதம் 7.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து, ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான நிதியாண்டின் 2-வது காலாண்டில் வட்டி வீதத்தின் அளவு அதே அளவான 7.1 சதவீதத்திலேயே தொடரும் என்று அரசு முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான அரசாணையை நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
Next Story