search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    திருவண்ணாமலையில் இன்று மேலும் 267 பேருக்கு கொரோனா

    திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 267 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
    திருவண்ணாமலை:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சென்னையில் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.

    இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 267 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,352 ஆக உயர்ந்துள்ளது.

    110 பெண்கள், 13 குழந்தைகள், 2 சுகாதாரப் பணியாளர்கள் உட்பட 267 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
    Next Story
    ×