என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணல் கடத்திய 3 பேர் கைது - லாரி, மோட்டார்சைக்கிள் பறிமுதல்
Byமாலை மலர்26 July 2020 12:55 PM GMT (Updated: 26 July 2020 12:55 PM GMT)
கும்பகோணத்தை அடுத்த அரியதிடல் பகுதியில் மணல் கடத்திய 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து லாரி, மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
கும்பகோணம்:
கும்பகோணத்தை அடுத்த அரியதிடல் பகுதியில் மணல் கடத்துவதாக பட்டீஸ்வரம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு லாரியில் மணல் அள்ளி கொண்டிருந்தவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் லாரி உரிமையாளர் சுவாமிமலையை சேர்ந்த பாலதண்டாயுதபாணி (வயது 42), லாரி டிரைவர் காளிதாஸ் (55), ஆனந்தகிருஷ்ணன் (52) ஆகியோர் என்பதும், அவர்கள் மணல் கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் மோட்டார்சைக்கிள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X