search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை

    கிருஷ்ணராயபுரம் அருகே கல்லூரி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கிருஷ்ணராயபுரம் அருகே உள்ள மணவாசி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகள் சரண்யா (வயது 20). இவர் கரூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். தற்போது கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் வீட்டில் இருந்து வந்தார். 

    இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி சரண்யா தீ வைத்துக்கொண்டார். இதில் வலி தாங்க முடியாமல் அலறிய சரண்யாவை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

    அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிந்து, சரண்யா எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×