search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வழக்கு பதிவு
    X
    வழக்கு பதிவு

    சமூக இடைவெளியை கடைபிடிக்காத 2 கடைக்காரர்கள் மீது வழக்கு

    ராமநாதபுரம் மாவட்டத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறிய 2 கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
    பரமக்குடி:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,000-த்தை நெருங்கி விட்டது. பரமக்குடி நகராட்சி மற்றும் சுற்றுவட்டாரத்தில் 300-க்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அரசின் உத்தரவுப்படி பரமக்குடி போலீசார் கடை மற்றும் தெருக்களில் சமூக இடைவெளியை பின்பற்றாதவர்கள், கண்ட இடங்களில் எச்சில் துப்புபவர்கள், பொது இடங்களில் மது அருந்துபவர்கள் என அனைவர் மீதும் போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்வதுடன் இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று இன்ஸ்பெக்டர் அமுதா தெரிவித்தார்.

    இந்த நிலையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க தவறிய 2 கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல முககவசம் அணியாதவர்கள் மீது நகராட்சி அலுவலர்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    Next Story
    ×