search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

    பிளஸ்-2 மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பொன்மலைப்பட்டி:

    திருச்சி ஏர்போர்ட் பகுதியை சேர்ந்தவர் விஜய் சுப்பிரமணி(வயது 23). பெட்ரோல் விற்பனை நிலையத்தில் வேலை பார்த்து வரும் இவரும், அதே பகுதியை சேர்ந்த பிளஸ்-2 மாணவியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இவர்களின் காதல் விவரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மாணவியின் வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் விஜய் சுப்பிரமணியால் மாணவி கர்ப்பமானதாக தெரிகிறது. இதனால் இருவரும் திருமணம் செய்துகொள்ள வீட்டை விட்டு வெளியேறினர்.

    இதையறிந்த மாணவியின் உறவினர்கள் அவர்களை ஏர்போர்ட் போலீஸ்நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணையில், மாணவி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கு பொன்மலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

    மாணவியின் தாயார் கொடுத்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மைனர் பெண்ணை ஆசைவார்த்தை கூறி கர்ப்பமாக்கியதாக விஜய் சுப்பிரமணியை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.




    Next Story
    ×