என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாலையை சீரமைக்க கோரி மரம் நடும் போராட்டம்
Byமாலை மலர்26 July 2020 6:44 AM GMT (Updated: 26 July 2020 6:44 AM GMT)
ஆரல்வாய்மொழி அருகே சாலையை சீரமைக்க கோரி திமுக சார்பில் சேதமடைந்த பகுதியில் மரம் நடும் போராட்டம் நடந்தது.
ஆரல்வாய்மொழி:
ஆரல்வாய்மொழி பெருமாள்புரம் வழியாக தேவசகாயம் மவுண்ட்டுக்கு சாலை செல்கிறது. இந்த சாலை ரெயில்வே பாலம் பகுதியில் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
எனவே, சாலையை சீரமைக்க கோரி தி.மு.க. சார்பில் சேதமடைந்த பகுதியில் மரம் நடும் போராட்டம் நடந்தது. இதற்கு தோவாளை ஒன்றிய தி.மு.க. செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். முன்னாள் கவுன்சிலர் சதீஷ்குமார், மாவட்ட பிரதிநிதி நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஆரல் பேரூர் தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் சேதுவேல், ஜேசுராஜ், பிரபு, எட்வின் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X