search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களுடன் உரையாடிய மோடி
    X
    மன் கி பாத் நிகழ்ச்சியில் மக்களுடன் உரையாடிய மோடி

    மன் கி பாத் நிகழ்ச்சியில் நாமக்கல் மாணவி கனிகாவிடம் பேசிய பிரதமர் மோடி

    பொதுமக்களுடன் உரையாடும் மன் கி பாத் நிகழ்ச்சியில் இன்று நாமக்கல் மாணவி கனிகாவுடன் பிரதமர் மோடி பேசினார்.
    நாமக்கல்:

    பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் வானொலியில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி வழியாக நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். மக்களிடமும் உரையாடுகிறார். 

    அந்த வகையில் இன்று நடைபெற்ற ‘மன் கி பாத்’ நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, கொரோனா பாதிப்பு, நோய்த்தடுப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் மற்றும் கார்கில் வெற்றி தினம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மோடி பேசினார்.

    பின்னர் பொதுமக்களுடனான உரையாடலின்போது தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி கனிகாவிடம் பிரதமர் மோடி பேசினார். அப்போது, நாமக்கல் என்றால் ஆஞ்சநேயர் கோவில் தான் ஞாபகம் வரும், இனி உங்கள் ஞாபகம் வரும் கனிகா, என மோடி குறிப்பிட்டார்.

    மாணவி கனிகா, சிபிஎஸ்சி 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 490 மதிப்பெண் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×