என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கமுதி அருகே மீன்பிடி திருவிழா
Byமாலை மலர்25 July 2020 10:20 AM GMT (Updated: 25 July 2020 10:20 AM GMT)
கமுதி அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 20 பேர் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். பின்னர் அவற்றை பொதுமக்கள் பகிர்ந்து கொண்டனர்.
கமுதி:
கமுதி அருகே பேரையூர் மேட்டுப்பட்டி ஊருணியில் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீன்பிடி திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் பரமக்குடி ஆர்.டி.ஓ. தங்கவேல் உத்தரவின் பேரில் கமுதி தாசில்தார் செண்பகலதா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் கிராம பொதுமக்கள், வருவாய்த்துறையினர், போலீசார் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் ஊருணியில் 20 பேர் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என்றும், பிடிபடும் மீன்களை கிராம மக்கள் பங்கிட்டுக்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மேட்டுப்பட்டி ஊருணியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் 20 பேர் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். பின்னர் அவற்றை பொதுமக்கள் பகிர்ந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X