என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருவாரூர் மாவட்டத்தில் ஒரே நாளில் டாக்டர் உள்பட 96 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்25 July 2020 10:09 AM GMT (Updated: 25 July 2020 10:09 AM GMT)
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் டாக்டர் உள்பட 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,060 பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்். இந்த நிலையில் நேற்று திருவாரூர் நகர் கீழவீதி பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்த ஒருவர், காட்டுக்கார தெருவை சேர்ந்த ஒருவர், ஐ.பி.கோவில் ஆத்தா குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருவாரூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துகுமரன் தலைமையில் துப்புரவு அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிருமிநாசினி தெளித்தனர். மேலும் கீழவீதி, காட்டுக்கார தெரு, ஐ.பி.கோவில் தெரு ஆகிய 3 பகுதிகளும் முற்றிலும் அடைக்கப்பட்டது. ஏற்கனவே நோய் தொற்றினால் அங்காளம்மன் கோவில் தெரு அடைக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதால் பொதுமக்கள் சற்று பீதியடைந்துள்ளனர்.
மேலும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணி புரிந்த டாக்டர் ஒருவர், குடவாசல் பகுதியை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை, வலங்கைமான் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் உள்பட 7 பேர், முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த 3 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,156 ஆக உயர்ந்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,060 பேர் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்். இந்த நிலையில் நேற்று திருவாரூர் நகர் கீழவீதி பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்த ஒருவர், காட்டுக்கார தெருவை சேர்ந்த ஒருவர், ஐ.பி.கோவில் ஆத்தா குளம் பகுதியை சேர்ந்த ஒருவர் என 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து திருவாரூர் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துகுமரன் தலைமையில் துப்புரவு அலுவலர் ராமச்சந்திரன் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு சென்று கிருமிநாசினி தெளித்தனர். மேலும் கீழவீதி, காட்டுக்கார தெரு, ஐ.பி.கோவில் தெரு ஆகிய 3 பகுதிகளும் முற்றிலும் அடைக்கப்பட்டது. ஏற்கனவே நோய் தொற்றினால் அங்காளம்மன் கோவில் தெரு அடைக்கப்பட்டுள்ள நிலையில் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பதால் பொதுமக்கள் சற்று பீதியடைந்துள்ளனர்.
மேலும் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணி புரிந்த டாக்டர் ஒருவர், குடவாசல் பகுதியை சேர்ந்த 4 வயது பெண் குழந்தை, வலங்கைமான் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன் உள்பட 7 பேர், முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த 3 பேர் உள்பட மாவட்டம் முழுவதும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,156 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X