search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை செய்யப்பட்ட குழந்தைகள் பிணமாக கிடந்த பரிதாப காட்சி.
    X
    கொலை செய்யப்பட்ட குழந்தைகள் பிணமாக கிடந்த பரிதாப காட்சி.

    சிவகாசி அருகே 2 குழந்தைகள் கழுத்தை நெரித்து கொலை - கொடூர தந்தை கைது

    2 குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்த கொடூர தந்தையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சிவகாசி:

    சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியை சேர்ந்தவர் காளிராஜ்(வயது 27). இவர் வேலைக்கு செல்லாமல் கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்து வந்தார். இவரது மனைவி தங்கபுஷ்பம்(26). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். தங்கபுஷ்பம் நேற்று காலை வழக்கம்போல் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்று விட்டார்.

    வீட்டில் காளிராஜ், குழந்தைகள் மாரீஸ்வரன்(5), காயத்ரி(4) ஆகியோர் இருந்தனர். மாலை 5 மணி வரை குழந்தைகள் வீட்டின் வெளியே மற்ற குழந்தைகளுடன் விளையாடி கொண்டு இருந்தன. பின்னர் குழந்தைகளின் நடமாட்டம் இல்லை. பட்டாசு ஆலை வேலை முடிந்து வீடு திரும்பிய தங்கபுஷ்பம், வீட்டின் உள்ளே குழந்தைகள் அசைவின்றி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை தொடர்ந்து குழந்தைகளை எழுப்பியபோது குழந்தைகள் பேச்சு, மூச்சு இல்லாமல் கிடந்துள்ளன. இதை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் சிவகாசி கிழக்கு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன், இன்ஸ்பெக்டர் இமானுவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் குழந்தைகள் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதும், 2 குழந்தைகளையும் காளிராஜ் கொலை செய்து விட்டு தலைமறைவாகி விட்டதும் தெரியவந்தது. குழந்தைகளின் உடல்களை கைப்பற்றிய சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து காளிராஜை தேடினர். பின்னர் அதே பகுதியில் தலைமறைவாக இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் எதற்காக அவர் குழந்தைகளை கொலை செய்தார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டில் இருந்த 2 குழந்தைகள், கொடூர தந்தையால் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சிவகாசி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×