search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாத்தான்குளம் தந்தை, மகன்
    X
    சாத்தான்குளம் தந்தை, மகன்

    சாத்தான்குளம் வழக்கு- தமிழ் தெரிந்த மேலும் ஒரு சிபிஐ அதிகாரி வருகை

    சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள தமிழ் தெரிந்த மேலும் ஒரு சிபிஐ அதிகாரி வருகை தந்துள்ளார்.
    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக 10 போலீசார் சிபிசிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ காவலுக்கு செல்ல காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயில் முத்து சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 3 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டது.

    இதையடுத்து இவ்வழக்கு தொடர்பாக காவலர்கள் 3 பேரையும் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சிபிஐ அழைத்து சென்றனர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

    மதுரை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள மேலும் ஒரு சிபிஐ அதிகாரி வருகை தந்துள்ளார்.  மேற்கண்ட வழக்கு தொடர்பாக  காவல் நிலையம் மற்றும் பென்னிக்ஸ் இல்லத்தில் விசாரணை நடக்கும் நிலையில் தமிழ் தெரிந்த சிபிஐ அதிகாரி ஒருவர்  வரவழைக்கப்பட்டுள்ளார். 
    Next Story
    ×