என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாத்தான்குளம் வழக்கு- தமிழ் தெரிந்த மேலும் ஒரு சிபிஐ அதிகாரி வருகை
Byமாலை மலர்21 July 2020 12:09 PM GMT (Updated: 21 July 2020 12:09 PM GMT)
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள தமிழ் தெரிந்த மேலும் ஒரு சிபிஐ அதிகாரி வருகை தந்துள்ளார்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக 10 போலீசார் சிபிசிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ காவலுக்கு செல்ல காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயில் முத்து சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 3 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டது.
இதையடுத்து இவ்வழக்கு தொடர்பாக காவலர்கள் 3 பேரையும் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சிபிஐ அழைத்து சென்றனர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
மதுரை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள மேலும் ஒரு சிபிஐ அதிகாரி வருகை தந்துள்ளார். மேற்கண்ட வழக்கு தொடர்பாக காவல் நிலையம் மற்றும் பென்னிக்ஸ் இல்லத்தில் விசாரணை நடக்கும் நிலையில் தமிழ் தெரிந்த சிபிஐ அதிகாரி ஒருவர் வரவழைக்கப்பட்டுள்ளார்.
சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கு தொடர்பாக 10 போலீசார் சிபிசிஐடி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ காவலுக்கு செல்ல காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வெயில் முத்து சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து 3 போலீசாருக்கு 3 நாள் சிபிஐ காவல் விதிக்கப்பட்டது.
இதையடுத்து இவ்வழக்கு தொடர்பாக காவலர்கள் 3 பேரையும் சாத்தான்குளம் காவல்நிலையத்திற்கு சிபிஐ அழைத்து சென்றனர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.
மதுரை சிபிஐ அலுவலகத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் சாத்தான்குளம் காவல்நிலையத்தில் விசாரணை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் மரண வழக்கு தொடர்பாக விசாரணையை மேற்கொள்ள மேலும் ஒரு சிபிஐ அதிகாரி வருகை தந்துள்ளார். மேற்கண்ட வழக்கு தொடர்பாக காவல் நிலையம் மற்றும் பென்னிக்ஸ் இல்லத்தில் விசாரணை நடக்கும் நிலையில் தமிழ் தெரிந்த சிபிஐ அதிகாரி ஒருவர் வரவழைக்கப்பட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X