என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடி பரமசிவன் மலைக்கோவிலில் கோபுர கலசம் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்21 July 2020 11:00 AM GMT (Updated: 21 July 2020 11:00 AM GMT)
போடி பரமசிவன் மலைக்கோவிலில் கோபுர கலசம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போடி:
போடி பரமசிவன் மலைக்கோவில் கோபுரத்தில் இருந்த கலசம் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருட்டு போனது. இதுகுறித்து போடி நகர் போலீஸ் நிலையத்தில் கோவில் பூசாரி சுந்தரம் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், போடி பெரியாண்டவர் சாலையில் போலீசார் நேற்று வாகன தணிக்கை செய்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை மறித்து அவரிடம் இருந்த சாக்குப்பையை சோதனையிட்டனர். அதற்குள் கோபுர கலசம் இருந்தது. விசாரணையில் அவர், போடி வலசத்துறை சாலையை சேர்ந்த மகேஷ் கண்ணன் (32) என்பதும், அது போடி பரமசிவன் மலைக்கோவிலில் திருடப்பட்ட கோபுர கலசம் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து மகேஷ் கண்ணனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் அவருடைய கூட்டாளி ஒருவருக்கு தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதனால், அவருடைய கூட்டாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X