என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விஷம் குடித்து திருநங்கை தற்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்21 July 2020 9:24 AM GMT (Updated: 21 July 2020 9:24 AM GMT)
சாமிதோப்பு ரெயில்வே கேட் அருகில் விஷம் குடித்து திருநங்கை தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தென்தாமரைகுளம்:
குமரி மாவட்டம் சாமிதோப்பில் இருந்து வடக்கு தாமரைகுளம் செல்லும் வழியில் ரெயில்வே கேட் உள்ளது. நேற்று காலை இந்த ரெயில்வே கேட் அருகில் 50 வயது மதிக்கத்தக்க சேலை கட்டிய பெண் பிணமாக கிடப்பதை அப்பகுதியில் உள்ளவர்கள் கண்டனர். அவர்கள், சாமிதோப்பு ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணனுக்கு தகவல் கொடுத்தனர். அதைதொடர்ந்து மதிவாணன் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு பாஸ்கரன், தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் தமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கை) என்பது தெரிய வந்தது.
அவரது உடலின் அருகில் பயிர்களுக்கு பயன்படுத்தும் மருந்து பாட்டில் இருப்பதையும் கண்டனர். இதனால் திருநங்கை இரண்டு நாட்களுக்கு முன்பே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். ஆனால், அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றிய விபரம் தெரியவில்லை.
போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இகுறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
குமரி மாவட்டம் சாமிதோப்பில் இருந்து வடக்கு தாமரைகுளம் செல்லும் வழியில் ரெயில்வே கேட் உள்ளது. நேற்று காலை இந்த ரெயில்வே கேட் அருகில் 50 வயது மதிக்கத்தக்க சேலை கட்டிய பெண் பிணமாக கிடப்பதை அப்பகுதியில் உள்ளவர்கள் கண்டனர். அவர்கள், சாமிதோப்பு ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணனுக்கு தகவல் கொடுத்தனர். அதைதொடர்ந்து மதிவாணன் தென்தாமரைகுளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.தகவல் அறிந்த கன்னியாகுமரி துணை சூப்பிரண்டு பாஸ்கரன், தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரராஜ் தமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் மூன்றாம் பாலினத்தவர் (திருநங்கை) என்பது தெரிய வந்தது.
அவரது உடலின் அருகில் பயிர்களுக்கு பயன்படுத்தும் மருந்து பாட்டில் இருப்பதையும் கண்டனர். இதனால் திருநங்கை இரண்டு நாட்களுக்கு முன்பே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். ஆனால், அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றிய விபரம் தெரியவில்லை.
போலீசார் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இகுறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X