search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கந்த சஷ்டி சர்ச்சை வீடியோ விவகாரம்- மேலும் 2 பேர் கைது

    கந்த சஷ்டி சர்ச்சை வீடியோ விவகாரத்தில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தி கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனனில் வெளியான வீடியோ இந்துக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆன்மீக தலைவர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முருக பக்தர்கள் மிகவும் புனிதமாக கருதும், கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்து மத கடவுள்களை ஆபாசமாக சித்தரித்து யூடியூப்பில் பதிவிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்தவர்கள் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்தி வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த செந்தில்வாசன்,  சுரேந்தர் என்பவர் என்பவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலைச் சேர்ந்த குகன், சோமசுந்தரம் ஆகிய மேலும் இரண்டு பேரை போலீசார் இன்று கைது செய்தனர்.  கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் தொடர்பான விசாரணை போலீசார்  மேற்க்கொண்டு வருகின்றனர். 
    Next Story
    ×