search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா தொற்று- கொல்லங்கோடு தீயணைப்பு நிலையம் மூடல்

    கொல்லங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
    கொல்லங்கோடு:

    கொல்லங்கோடு தீயணைப்பு நிலைய வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. அதைத்தொடர்ந்து நிலையத்தை சுற்றி கிருமிநாசினி தெளித்து பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

    தற்போது தீயணைப்பு நிலைய பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு தீயணைப்பு நிலையம் தற்காலிகமாக மாற்று வீரர்கள் மூலம் கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவில் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. 3 நாட்கள் அங்கிருந்து செயல்படும். அவசர தேவைக்கு 94450 86224 என்ற எண்ணை பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம் என தீயணைப்பு நிர்வாகம் அறிவித்து உள்ளது.
    Next Story
    ×