search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை ஐகோர்ட்
    X
    சென்னை ஐகோர்ட்

    கூட்டுறவு வங்கி வழக்கில் இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு

    ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது.
    சென்னை:

    நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வருவது தொடர்பாக,  மத்திய அரசு அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், அதற்கு தடை விதிக்கக்கோரியும், தமிழகத்தில் உள்ள நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் பழமையான இரு கூட்டுறவு வங்கிகள் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கை இன்று விசாரித்த ஐகோர்ட் நீதிபதிகள், ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகளை கொண்டு வருவதற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்தனர். மேலும் இவ்வழக்கு தொடர்பாக மத்திய அரசு, ரிசர்வ் வங்கி விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

    Next Story
    ×