search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    விளாத்திகுளம் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய 3 பேர் கைது

    விளாத்திகுளம் அருகே வீட்டில் கஞ்சா பதுக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விளாத்திகுளம்:

    விளாத்திகுளம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சூரங்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் சுற்றிய 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மேல்மாந்தையைச் சேர்ந்த மாடசாமி மகன் முனியசாமி (வயது 32), சூரங்குடியைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் மகேஸ்வரன் (36) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரிடமும் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார் மேல் விசாரணை நடத்தினர். அப்போது மேல்மாந்தையில் உள்ள முனியசாமி வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்து இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீசார், வீட்டில் பதுங்கு குழி தோண்டி வைக்கப்பட்டிருந்த 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து முனியசாமி, அவரது தந்தை மாடசாமி மற்றும் மகேஸ்வரன் ஆகிய மூவரையும் சூரங்குடி போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×