என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓமியோபதி படித்து விட்டு ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது
Byமாலை மலர்19 July 2020 10:18 AM GMT (Updated: 19 July 2020 10:18 AM GMT)
கரூர் அருகே ஓமியோபதி படித்து விட்டு, ஆங்கில மருத்துவம் பார்த்த போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
நொய்யல்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் பொன்னிஈஸ்வரன் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபாலகண்ணன் (வயது 51). இவர் கரூர் மாவட்டம், தளவாப்பாளையம் கடைவீதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, அதில் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இவர் தினமும் காலையில் தளவாப்பாளையத்திற்கு வந்து, பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து விட்டு, இரவு வீட்டிற்கு சென்று விடுவாராம்.
இந்தநிலையில் கோபாலகண்ணன் மீது சந்தேகம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள், கரூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்தாதேவியிடம், கோபாலகண்ணனின் மருத்துவ முறை குறித்து புகார் அளித்தனர். அதன்பேரில், அவர் சம்பந்தப்பட்ட கிளினிக்குக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது கோபாலகண்ணன் ஓமியோபதி மட்டும் படித்து விட்டு, அப்பகுதி பொதுமக்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக ஆங்கில மருத்துவம் பார்த்து, மருந்து, மாத்திரைகள் வழங்கி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து சாந்தாதேவி வேலாயுதம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில், போலீசார் தளவாப்பாளையத்திற்கு வந்து, போலி டாக்டர் கோபாலகண்ணனை கைது செய்தனர். மேலும், அங்கிருந்த ஆங்கில மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட கோபாலகண்ணன், பின்னர் சொந்த ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனால் கோபாலகண்ணனிடம் மருத்துவம் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X