என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிறையில் வாடும் அறிஞர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்18 July 2020 2:21 PM GMT (Updated: 18 July 2020 2:21 PM GMT)
தஞ்சை ரெயில் நிலையம் அருகே பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார்.
தஞ்சாவூர்:
தஞ்சை ரெயில் நிலையம் அருகே பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நீலமேகம் தலைமை தாங்கினார்.
தமிழர் தேசிய முன்னணி பொது செயலாளர் அயனாவரம் முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கண்ணன், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துரை.மதிவாணன் வரவேற்றார். தமிழ்தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் கலந்து கொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை எதிர்த்து குரல் கொடுத்தமைக்காக, சிறையில் அடைக்கப்பட்டு, இருதய நோயால் உயிருக்கு போராடும் எழுத்தாளர் வரவரராவ் மற்றும் 21 மாதங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் அறிஞர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொருளாளர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X