என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கரூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்17 July 2020 2:04 PM GMT (Updated: 17 July 2020 2:04 PM GMT)
கரூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் அருகே உள்ள வாங்கல் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி சோலையம்மாள் (வயது 28). காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சென்னை அம்பத்தூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து, வெல்டராக வேலை செய்து வந்த பார்த்தசாரதி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் சொந்த ஊரான வாங்கலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பார்த்தசாரதி மதுகுடிக்க சென்றுள்ளார். இதை சோலையம்மாள் தட்டிக் கேட்டதால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சோலையம்மாள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X