search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கரூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை

    கரூர் அருகே பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கரூர்:

    கரூர் அருகே உள்ள வாங்கல் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவரது மனைவி சோலையம்மாள் (வயது 28). காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. சென்னை அம்பத்தூரில் குடும்பத்துடன் தங்கி இருந்து, வெல்டராக வேலை செய்து வந்த பார்த்தசாரதி, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு குடும்பத்துடன் சொந்த ஊரான வாங்கலுக்கு வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பார்த்தசாரதி மதுகுடிக்க சென்றுள்ளார். இதை சோலையம்மாள் தட்டிக் கேட்டதால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த சோலையம்மாள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து வாங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தி வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×