என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 92.3 சதவீதம் பேர் தேர்ச்சி
Byமாலை மலர்16 July 2020 3:22 AM GMT (Updated: 16 July 2020 3:22 AM GMT)
தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சென்னை:
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அரசு அறிவித்தது.
மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 9.30 மணியளவில் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதற்கு முன்பாக தேர்ச்சி விகிதம் தொடர்பான விவரங்களை மாவட்ட வாரியாக அரசு வெளியிட்டது. தமிழகதில் 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 94.8 சதவீத பேரும், மாணவர்கள் 89.41 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் மாணவர்களை விட 5.39 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வில் 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 96.99 சதவீதம் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 96.39 சதவீதம் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresult.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அரசு அறிவித்தது.
மாணவர்களின் கைப்பேசி எண்ணிற்கும் மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து பிளஸ்2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று 9.30 மணியளவில் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. அதற்கு முன்பாக தேர்ச்சி விகிதம் தொடர்பான விவரங்களை மாவட்ட வாரியாக அரசு வெளியிட்டது. தமிழகதில் 92.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பிளஸ்-2 தேர்வில் மாணவிகள் 94.8 சதவீத பேரும், மாணவர்கள் 89.41 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவியர் மாணவர்களை விட 5.39 சதவீதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பிளஸ்-2 தேர்வில் 97.12 சதவீதம் தேர்ச்சி பெற்று திருப்பூர் மாவட்டம் முதலிடம் பெற்றுள்ளது. 96.99 சதவீதம் தேர்ச்சி பெற்று ஈரோடு மாவட்டம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 96.39 சதவீதம் தேர்ச்சி பெற்று கோவை மாவட்டம் மூன்றாவது இடத்தில் உள்ளது.
தேர்வு முடிவுகளை மாணவர்கள் tnresult.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் அறிந்து கொள்ளலாம்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X