search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    சென்னை 1291 பேர்,மதுரையில் 341 பேருக்கு இன்று புதிதாக கொரோனா - மாவட்ட வாரியாக விவரம்

    தமிழகத்தில் இன்று 4 ஆயிரத்து 496 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட வாரியாக விவரத்தை காண்போம்.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று மேலும் 4,496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,51,820 ஆக உள்ளது.

    தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரை விட குணமடைந்தோர் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 97,310ல் இருந்து 1,02,310 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 68 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இறப்பு எண்ணிக்கை 2,167 ஆக உயர்ந்துள்ளது. 46வது நாளாக தொடர்ந்து இரட்டை இலக்க எண்ணிக்கையில் உயிரிழப்பு பதிவாகி உள்ளது.

    சென்னையில் இன்று 1,291 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 80,961 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் கொரோனாவால் இதுவரை 1,318 பேர் உயிரிழந்துள்ளனர்.

    தமிழகத்தில் முதன்முறையாக ஒரே நாளில் 5,000 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது.

    மாவட்ட வாரியாக இன்று புதிதாக கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை:-

        அரியலூர் 43
        செங்கல்பட்டு 186
        சென்னை- 1291
        கோவை- 104
        கடலூர்- 59
        தருமபுரி- 9
        திண்டுக்கல் - 119
        ஈரோடு -9
        கள்ளக்குறிச்சி- 75
        காஞ்சிபுரம் - 163
        கன்னியாகுமரி - 135
        கரூர்- 3
        கிருஷ்ணகிரி- 29
        மதுரை- 341
        நாகப்பட்டினம் - 7
        நாமக்கல் - 12
        நீலகிரி - 25
        பெரம்பலூர்- 3
        புதுக்கோட்டை- 50
        ராமநாதபுரம்- 119
        ராணிப்பேட்டை- 64
        சேலம் -24
        சிவகங்கை - 100
        தென்காசி -17
        தஞ்சாவூர்- 77
        தேனி- 59
        திருப்பத்தூர்- 20
        திருவள்ளூர்- 278
        திருவண்ணாமலை- 124
        திருவாரூர் -9
        தூத்துக்குடி- 269
        நெல்லை- 164
        திருப்பூர்- 25
        திருச்சி -99
        வேலூர்- 97
        விழுப்புரம்- 97
        விருதுநகர்- 175

    விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்    12
    விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)    4
    ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்    0
    Next Story
    ×