search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலத்தில் புதிய மேம்பாலத்தை திறந்துவைத்த முதலமைச்சர்
    X
    சேலத்தில் புதிய மேம்பாலத்தை திறந்துவைத்த முதலமைச்சர்

    சேலத்தில் புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

    சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்ட மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
    சேலம்:

    சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரூ.33 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த புதிய பாலத்தால் 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவர்.

    பேளூர்-கிளாக்காடு பகுதியில் ரூ.3.27 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தையும் திறந்து வைத்து அவர் கூறியதாவது:

    கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. மக்களின் ஒத்துழைப்பு இருந்தால் தான் கொரோனாவை குறைக்க முடியும். நோய் பரவலை தடுக்க பொதுமக்களும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.



    Next Story
    ×