search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் தப்பி ஓட்டம்

    தொப்பூர் அருகே 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற வாலிபர் தப்பி ஓடினார். அவரை தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.
    நல்லம்பள்ளி:

    தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த விவசாயியின் 7 வயது மகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொப்பூர்அருகே உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமியை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வனப்பகுதியை சுற்றி காட்டுவதாக மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றுள்ளார்.

    அங்கு சிறுமியின் கால்களில் போடப்பட்டிருந்த 2 வெள்ளி கொலுசுகளையும் கழற்றி கொண்ட அந்த வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். உடனே சிறுமி பயத்தில் அலறி உள்ளாள். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த பகுதி அருகே ஆடுமேய்த்து கொண்டிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்துள்ளனர்.

    இதை பார்த்த அந்த நபர் அங்கிருந்து மோட்டார்சைக்கிளை எடுத்து கொண்டு தப்பி சென்று விட்டார். இந்த சம்பவத்தில் அந்த சிறுமியின் உடலில் காயங்கள் ஏற்பட்டிருந்தன. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் சிறுமியை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    இதுதொடர்பாக சிறுமியின் தந்தை தொப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பலாத்கார முயற்சியில் ஈடுபட்ட மர்மநபரை தனிப்படை அமைத்து தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×