search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலி

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 முதியவர்கள் பலியானதை தொடர்ந்து இறந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு முன்னாள் ராணுவ வீரர், ஓசூரைச் சேர்ந்த கேண்டீன் ஊழியர் உள்பட 5 பேர் ஏற்கனவே இறந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மேலும் 2 பேர் இறந்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியைச் சேர்ந்த 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், காய்ச்சல், இருமல் மற்றும் சுவாசிப்பதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் கடந்த 12-ந் தேதி கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இந்த நிலையில் ஏற்கனவே நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று முன்தினம் இரவு இறந்தார்.

    இதே போல சூளகிரி பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவரும், காய்ச்சல் இருமல், மூச்சு திணறல் உள்ளிட்ட பிரச்சினைகளுடன் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த 10-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியானது.

    இந்த நிலையில் அவர் நேற்று முன்தினம் இறந்தார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஏற்கனவே 5 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், நேற்று முன்தினம் 2 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
    Next Story
    ×