என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி - மேலும் 29 பேருக்கு தொற்று உறுதி
Byமாலை மலர்15 July 2020 10:03 AM GMT (Updated: 15 July 2020 10:03 AM GMT)
தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் பலியாகினர்.. நேற்று 29 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் 709 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று மேலும் 29 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருந்தாளுனரும் அடங்குவார்.
தஞ்சையில் 9 பேரும், பட்டுக்கோட்டையில் 6 பேரும், கும்பகோணத்தில் 5 பேரும், கபிஸ்தலம், மெலட்டூர், பாபநாசம், வல்லம், மாரியம்மன்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் அடங்குவர். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கும்பகோணம் பகுதியை சேர்ந்த 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணம் அடைந்து நேற்று வீடு திரும்பினார். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 422 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 305 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் 709 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று மேலும் 29 பேருக்கு தொற்று உறுதியானது. இதில் தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருந்தாளுனரும் அடங்குவார்.
தஞ்சையில் 9 பேரும், பட்டுக்கோட்டையில் 6 பேரும், கும்பகோணத்தில் 5 பேரும், கபிஸ்தலம், மெலட்டூர், பாபநாசம், வல்லம், மாரியம்மன்கோவில் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் அடங்குவர். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 738 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கும்பகோணம் பகுதியை சேர்ந்த 2 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் தஞ்சை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் குணம் அடைந்து நேற்று வீடு திரும்பினார். இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 422 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 305 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X