என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
துணை மேலாளருக்கு கொரோனா- கோவில்பட்டியில் வங்கி மூடப்பட்டது
Byமாலை மலர்15 July 2020 9:49 AM GMT (Updated: 15 July 2020 9:49 AM GMT)
கோவில்பட்டி பிரதான சாலையில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி துணை மேலாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து வங்கி மூடப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி பிரதான சாலையில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றும் 54 வயதான கடன் பிரிவு துணை மேலாளருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. அவர் ஸ்ரீராம்நகர் நகர்நல மையத்துக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவு நேற்று வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் ராஜாராம், தாசில்தார் மணிகண்டன் மற்றும் சுகாதாரத்துறையினர் அந்த வங்கிக்கு சென்று, அங்கு பணியில் இருந்தவர்களை வெளியேற்றி, வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் வங்கி மூடப்பட்டது. மேலும் துணை மேலாளருடன் தொடர்பில் இருந்ததாக அறியப்பட்ட 17 பேருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, வங்கிக்கு நாளை (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் விடுமுறை அளித்து வங்கி நிர்வாகம் அறிவித்து உள்ளது.
கோவில்பட்டி பிரதான சாலையில் செயல்படும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பணியாற்றும் 54 வயதான கடன் பிரிவு துணை மேலாளருக்கு கடந்த ஒரு வாரமாக காய்ச்சல் இருந்தது. அவர் ஸ்ரீராம்நகர் நகர்நல மையத்துக்கு சென்று கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். அதன் முடிவு நேற்று வந்தது. அதில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தொடர்ந்து, நகராட்சி ஆணையாளர் ராஜாராம், தாசில்தார் மணிகண்டன் மற்றும் சுகாதாரத்துறையினர் அந்த வங்கிக்கு சென்று, அங்கு பணியில் இருந்தவர்களை வெளியேற்றி, வங்கி முழுவதும் கிருமி நாசினி தெளித்தனர். பின்னர் வங்கி மூடப்பட்டது. மேலும் துணை மேலாளருடன் தொடர்பில் இருந்ததாக அறியப்பட்ட 17 பேருக்கு சளி மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து, வங்கிக்கு நாளை (வியாழக்கிழமை) வரை 3 நாட்கள் விடுமுறை அளித்து வங்கி நிர்வாகம் அறிவித்து உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X