என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாவட்டத்தில் ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று - பாதிப்பு எண்ணிக்கை 203 ஆக உயர்வு
Byமாலை மலர்15 July 2020 9:45 AM GMT (Updated: 15 July 2020 9:45 AM GMT)
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்து உள்ளது.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் இறந்த நிலையில், 96 பேர் குணமாகி வீடு திரும்பினர். மீதமுள்ள 92 பேர் நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1 வயது சிறுவன் உள்பட மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த சிறுவன் சேந்தமங்கலம் துத்திக்குளம் பகுதியை சேர்ந்தவன். இதேபோல் நாமக்கல் அன்புநகரை திட்டம்-2 பகுதியை சேர்ந்த 47 வயது பெண், 20 வயது வாலிபர், புதுப்பட்டி எஸ்.பி.எஸ். நகரை சேர்ந்த 18 வயது இளம்பெண், 32 வயது ஆண், 14 வயது சிறுவன், 18 வயது வாலிபர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் திருச்செங்கோடு அருகே உள்ள பன்னீர்குத்திபாளையத்தை சேர்ந்த 27 வயது வாலிபர், திருச்செங்கோடு தளிகாம்பிகை நகரை சேர்ந்த 29 வயது வாலிபர், அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, 48 வயது பெண், திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டியை சேர்ந்த 36 வயது ஆண், 21 வயது வாலிபர், திருச்செங்கோட்டை சேர்ந்த 55 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்து உள்ளது. இவர்கள் நாமக்கல், சேலம், திருச்செங்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்து உள்ளது. அதே சமயம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்து இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 189 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் இறந்த நிலையில், 96 பேர் குணமாகி வீடு திரும்பினர். மீதமுள்ள 92 பேர் நாமக்கல், ராசிபுரம் மற்றும் திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 1 வயது சிறுவன் உள்பட மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த சிறுவன் சேந்தமங்கலம் துத்திக்குளம் பகுதியை சேர்ந்தவன். இதேபோல் நாமக்கல் அன்புநகரை திட்டம்-2 பகுதியை சேர்ந்த 47 வயது பெண், 20 வயது வாலிபர், புதுப்பட்டி எஸ்.பி.எஸ். நகரை சேர்ந்த 18 வயது இளம்பெண், 32 வயது ஆண், 14 வயது சிறுவன், 18 வயது வாலிபர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல் திருச்செங்கோடு அருகே உள்ள பன்னீர்குத்திபாளையத்தை சேர்ந்த 27 வயது வாலிபர், திருச்செங்கோடு தளிகாம்பிகை நகரை சேர்ந்த 29 வயது வாலிபர், அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி, 48 வயது பெண், திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டியை சேர்ந்த 36 வயது ஆண், 21 வயது வாலிபர், திருச்செங்கோட்டை சேர்ந்த 55 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா இருப்பது தெரியவந்து உள்ளது. இவர்கள் நாமக்கல், சேலம், திருச்செங்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனால் நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 203 ஆக உயர்ந்து உள்ளது. அதே சமயம் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்து இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X