என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பழுதாகி நின்ற லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- 2 பேர் பலி
Byமாலை மலர்15 July 2020 8:48 AM GMT (Updated: 15 July 2020 8:48 AM GMT)
பழுதாகி நின்ற லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவடி:
ஆவடியை அடுத்த மோரை வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). செங்குன்றம் பகுதியில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வருவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது உறவினர் நரேஷ் குமார் (30), என்பவர் சரவணனை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் ஆவடி வீராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
இதையடுத்து வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சர்வீஸ் சாலையில் இருவரும் வந்த போது, வெள்ளனூரை அடுத்த ஆர்ச் அந்தோணியார் நகர் அருகே பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் இருவரும் வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில், பலத்த காயமடைந்த சரவணன் மற்றும் நரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஆவடியை அடுத்த மோரை வீராபுரம் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 42). செங்குன்றம் பகுதியில் லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வருவதற்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அவரது உறவினர் நரேஷ் குமார் (30), என்பவர் சரவணனை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் ஆவடி வீராபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
இதையடுத்து வண்டலூர்-மீஞ்சூர் 400 அடி சர்வீஸ் சாலையில் இருவரும் வந்த போது, வெள்ளனூரை அடுத்த ஆர்ச் அந்தோணியார் நகர் அருகே பழுதாகி நின்ற லாரியின் பின்புறம் இருவரும் வந்த மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில், பலத்த காயமடைந்த சரவணன் மற்றும் நரேஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். இந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X