search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆர்ப்பாட்டம்
    X
    ஆர்ப்பாட்டம்

    சுற்றுலா வாகன டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த சுற்றுலா வாகன டிரைவர்கள் கோவையில் உள்ள மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    கோவை:

    கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு உள்ளன. இதனால் சுற்றுலா கார் டிரைவர்கள், ஆட்டோ டிரைவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே தங்களுக்கு நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று சுற்றுலா வாகன டிரைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த நிலையில் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த சுற்றுலா வாகன டிரைவர்கள் கோவையில் உள்ள மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு சதீஷ்குமார் தலைமை தாங்கி பேசினார். இதில் இதில் கலந்து கொண்டவர்கள் தங்களின் சட்டையில் கருப்பு பட்டை அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
    Next Story
    ×