என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஸ்கூட்டரில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேர் கைது
Byமாலை மலர்15 July 2020 7:41 AM GMT (Updated: 15 July 2020 7:41 AM GMT)
கிருஷ்ணகிரி அருகே ஸ்கூட்டரில் கஞ்சா கடத்திய பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சந்தைபேட்டை பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த பெண்ணை நிறுத்தி, வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து, அந்த வாகனத்தை கஞ்சாவுடன் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட பெண்ணிடம் அவர் யார்? அவருக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதில் அந்த பெண் மகராஜகடை அருகே உள்ள மாதினாவூர் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி சுமா (வயது 25) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சுமாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் சூளகிரி போலீசார் கீழ்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா வைத்துக்கொண்டு நின்றிருந்த கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த ராணி (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி டவுன் போலீசார் சந்தைபேட்டை பகுதியில் உள்ள ஒரு கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ஸ்கூட்டரில் வந்த பெண்ணை நிறுத்தி, வாகனத்தை சோதனை செய்தனர். அதில் 4 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து, அந்த வாகனத்தை கஞ்சாவுடன் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட பெண்ணிடம் அவர் யார்? அவருக்கு எங்கிருந்து கஞ்சா கிடைத்தது? என்று போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இதில் அந்த பெண் மகராஜகடை அருகே உள்ள மாதினாவூர் கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி சுமா (வயது 25) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சுமாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதே போல் சூளகிரி போலீசார் கீழ்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா வைத்துக்கொண்டு நின்றிருந்த கிருஷ்ணகிரி பழையபேட்டையை சேர்ந்த ராணி (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 800 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X