search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    சென்னையில் கொரோனாவுக்கு 15 மண்டலங்களில் சிகிச்சை பெறுவோர் விவரம்

    சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்த வண்ணம் உள்ளது. இருப்பினும் குணமடைவோரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.

    தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே வருகிறது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 79,662 ஆக உள்ளது. 15,814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன் விவரம் பின்வருமாறு:-  

    கோடம்பாக்கம் - 2,199 பேர்

    அண்ணா நகர் - 1,560 பேர்

    தேனாம்பேட்டை -1,497 பேர்

    தண்டையார்பேட்டை -1,006 பேர்

    ராயபுரம் - 1,214 பேர்

    அடையாறு- 1,164 பேர்

    திரு.வி.க. நகர்- 998 பேர்

    வளசரவாக்கம்- 914 பேர்

    அம்பத்தூர்- 943 பேர்

    திருவொற்றியூர்- 608 பேர்

    மாதவரம்- 438 பேர்

    ஆலந்தூர்- 508 பேர்

    பெருங்குடி- 353 பேர்

    சோழிங்கநல்லூர்- 464 பேர்

    மணலியில் 280 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×