search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 3,161 ஆக உயர்வு

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,161 ஆக உயர்ந்துள்ளது.
    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 86 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,161 ஆக உயர்ந்துள்ளது.

    நேற்று பாதிக்கப்பட்டவர்களில், வெம்பாக்கம், கீழ்பென்னாத்தூர், நாவல்பாக்கத்தில் தலா ஒருவர், தச்சூர், தெள்ளார், தண்டராம்பட்டு, புதுப்பாளையம், சேத்துப்பட்டில் தலா 2 பேர், ஆக்கூர், கலசபாக்கத்தில் தலா 4 பேர், வந்தவாசியில் 8 பேர், திருவண்ணாமலை நகராட்சியில் 9 பேர், காட்டாம்பூண்டியில் 13 பேர், போளூரில் 15 பேர், கிழக்கு ஆரணியில் 20 பேர் ஆவர். இதில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 போலீசார் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மருத்துவமனைகள் மற்றும் முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 
    Next Story
    ×