search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    மனைவியை கொலை செய்ய முயன்ற லாரி டிரைவர் கைது

    பெரம்பலூர் அருகே மனைவியை கொலை செய்ய முயன்ற லாரி டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் அருகேயுள்ள சோமண்டாபுதூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(வயது 37). இவரது மனைவி வனிதா(23). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும், பெண் குழந்தையும் உள்ளன. லாரி டிரைவரான சதீஷ்குமாருக்கும், வனிதாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுமாம். மேலும் சதீஷ்குமார் தான் சம்பாதிக்கும் பணத்தை வனிதாவுக்கு குடும்ப செலவுக்கு கொடுக்காமல், மது குடித்து விடுவாராம்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை சதீஷ்குமாரின் சட்டை பையில் இருந்த ரூ.ஆயிரத்தை வனிதா எடுத்து பீரோவில் மறைத்து வைத்துள்ளார். பணத்தை காணவில்லை என்று சதீஷ்குமார் காலை முதலே வனிதாவிடம் தகராறு செய்து விட்டு வெளியே சென்றார். இதனால் மதியம் வனிதா தனது தாய் லட்சுமியை வீட்டிற்கு வரவழைத்தார். மாலையில் வீட்டிற்கு திரும்பி வந்த சதீஷ்குமார், வனிதாவிடம் மீண்டும் பணத்தை கேட்டு, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியும், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து வனிதா மீது ஊற்றி தீயை பற்ற வைத்தார். தீ உடல் முழுவதும் பரவ ஆரம்பித்தால் வலியால் வனிதா அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்த தாய் லட்சுமி தண்ணீரை எடுத்து வனிதாவின் மீது ஊற்றி தீயை அணைத்து காப்பாற்றினார். பின்னர் அவரை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பாக வனிதா அளித்த வாக்குமூலத்தின் பேரில், பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    Next Story
    ×