என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க.வை வன்முறைக் கட்சி எனக்கூறிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ். பாரதி கண்டனம்
Byமாலை மலர்13 July 2020 4:45 PM GMT (Updated: 13 July 2020 4:45 PM GMT)
திருப்போரூர் துப்பாக்கிச்சூட்டில் எம்.எல்.ஏ. கைது செய்யப்பட்ட விவகாரத்தை திசை திருப்ப வேண்டாம் என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஆர்.எஸ். பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்போரூர் சம்பவத்தை, எம்.எல்.ஏ. இதயவர்மன் தனது சொந்த நலனுக்காக செய்தது போல அமைச்சர் ஜெயக்குமார் சித்தரிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.
கோயில் நிலம் தனியாருக்கு விற்கப்படுவதை தடுக்க வேண்டும் என எம்.எல்.ஏ சென்ற நிலையில், 50-க்கும் மேற்பட்ட ரவுடிகளை காவல்துறை அனுமதித்தது எப்படி? என கேள்வி எழுப்பி உள்ளார்.
நிலத்தை ஆக்கிரமிக்க முயன்றவர், அ.தி.மு.க. பிரமுகரின் பினாமி என்பதை மறைத்துவிட்டு, ஜெயக்குமார் திசை திருப்பும் வகையில் பேசுவதாக கூறியுள்ளார். தி.மு.க. எம்.எல்.ஏ நியாயத்தை நிலைநாட்டுவார் என நம்பிக்கை உள்ளதாகவும், உண்மை குற்றவாளிகளை தப்பவைக்கும் முயற்சியை முறியடிப்போம்.
வானத்தை நோக்கி சுட்டதற்கு பொய் வழக்கு பதிவு செய்து எம்.எல்.ஏவை கைது செய்துள்ளது திட்டமிட்ட சதிச்செயல். தி.மு.க.வை வன்முறைக் கட்சி எனக்கூறிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு கண்டனம் என்றும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X