search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    தமிழகத்தில் மேலும் 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

    தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழகத்தில் இன்று மேலும் 4,328 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4,270, வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 58 பேர் உட்பட 4,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 43,548 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 4,328 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,47,126 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் இதுவரை 87,111 ஆண்கள், 55,664 பெண்கள், மூன்றாம் பாலினத்தவர் 23 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனாவுக்கு 48,196 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் மேலும் 3,035 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.  கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 89,532ல் இருந்து 92,567 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனா காரணமாக மேலும் 66 பேர் உயிரிழந்ததால் இறப்பு எண்ணிக்கை 2,032 ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 50 பேர், தனியார் மருத்துவமனையில் 16 பேர் என கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். வேறு நோய் பாதிப்பு இல்லாத 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். 
    Next Story
    ×