search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    கள்ளக்குறிச்சியில் 68 பேருக்கு தொற்று உறுதி

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 68 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனா தொற்றால் 1723 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் நேற்று 250 பேரின் பரிசோதனை முடிவு வெளிவந்தது. இதில் 68 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதன் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1723-ல் இருந்து 1791 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 999 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த 2 வாரத்தில் மட்டும் கொரோனா தொற்றால் ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்
    Next Story
    ×