search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
    X
    தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ

    3 தொகுதி இடைத்தேர்தல் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை- தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி தகவல்

    தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
    சென்னை:

    தமிழகத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, திருவொற்றியூர் மற்றும் குடியாத்தகம் தொகுதிகள் காலியாக உள்ளன. இத்தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் குறித்து தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியதாவது:-

    3 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது பற்றி எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேதி முடிவு செய்யவில்லை என்றாலும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாராக உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் செய்வது குறித்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை செய்யப்பட்டது.

    இவ்வாறு அவர் கூறினார். 
    Next Story
    ×